Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா

ஜுலை 14, 2023 07:35

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இது 108 வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூராகும். 

இதில் லட்சுமி தேவியின் அம்சம் ஆகிய ஸ்ரீஆண்டாள் மானிட பெண்ணாக பிறந்து பூமாலை சூட்டியபின் பாமாலை பாடி இறைவனை அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான். இங்கு ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத் திருவிழா மிக வெகு விமரிசையாக கொண்டாடப்படும். 

மேலும் இந்த வருடத்திற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்துடன் துவங்கிய ஆடிப்பூர விழாவில் ஐந்தாம் திருநாள் வருகின்ற 18 ஆம் தேதி அன்று கருட சேவையும், அதனை தொடர்ந்து 20ஆம் தேதி சையன சேவையும் நடைபெறும்.முக்கிய நிகழ்வான திரு ஆடிப்பூர தேரோட்டம் வரும் 22 ஆம் தேதி காலை 8.05 மணிக்கு நடைபெறுகிறது. 

பெரிய திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் காட்சியளிப்பர் மேலும் நடைபெற்ற கொடியேற்றம் வைபவத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்